ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.
கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.
ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!
கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?
ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!
தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும்
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ..
ஏனோ ஏனோ..
ஏனோ ஏனோ..
அன்பே..
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...