Blog Entry
முடிந்தால் அவளையும் மகளே என்று விளி.
by , under
குறைந்தது நூறு முறை
என் கடிதம்
சுமந்து போனது
கண்ணீரையும்,
கடந்தகாலத்தையும்,
வந்துஅழைத்துப் போங்களையும்...
திடீரென்று எனக்குள் ஒரு கதவு
அறைந்து திறந்தது
என் அறைக்கதவு
திறந்தது போலவே...
அறை தோழியாய்
வந்தவள்
என்னைவிடச் சின்னவள்
அகதிகள் ஒதுக்கீட்டில்
இடம் கிடைத்திருக்கிறது
யாழ்ப்பாணத்துக்காரியாம்!
இறுக்கி மூடிய உதட்டுக்குள்ளிருந்து
கள்ளிப்பால் போல் ஒவ்வொன்றாய்
சொட்டிய கதைகள்...
என் நேற்றைய கடிதம் கண்டு
அம்மா வியந்திருக்க வேண்டும்
"அம்மா நான் மிக நலம்
அடிக்கடி வர வேண்டாம்
அழுவதை நான் நிறுத்தி விட்டேன்
அடுத்த முறை அங்கே
வரும்போது
ஒரு சினேகிதியை
அழைத்து வருவேன்...
முடிந்தால் அவளையும்
மகளே என்று விளி..."
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
2 Responses to 'முடிந்தால் அவளையும் மகளே என்று விளி.'
Comment by கவியாழி கண்ணதாசன்.
நல்ல சிநேகிதியுடன் இனி தமிழ் செல்லக் கவிதைகள் வருமா? உங்கள் மகிழ்வுக்கு வாழ்த்துக்கள்
Comment by திண்டுக்கல் தனபாலன்.
வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_14.html) சென்று பார்க்கவும்... நன்றி...
Post a Comment