பார்த்த முதல் நாளே உன்னைப் பார்த்த முதல் நாளே
காட்சிப் பிழை போலே உணர்ந்தேன் காட்சிப்பிழை போலே
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்
கடலாய் மாறிப்பின் எனை இழுத்தாய்
என்பதாகை தாங்கிய உன்முகம் உன்முகம்
என்றும் மறையாதே
காட்டிக் கொடுக்கிறதே
கண்ணே காட்டிக் கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகலிரவை
உன் அலாதி அன்பினில் நனைந்த பின் நனைந்த பின்
நானும் மழையானேன்
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பதும் உன்முகமே
எனைப் பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீயறிந்து நடப்பதை வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனதாசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்.
போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சாரியென்று சாரியென்று உனைப் போகச் சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
(காட்டி...)
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதைக் கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உனைப் பார்க்கும் காட்சி
கனவாக வந்ததென்று நினைத்தேன்
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறுவீடு கட்டிக்கொள்ளத் தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
(பார்த்த...)
Blog Entry
Popular Posts
-
என் பெயரே மறந்து போனேன் -என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன் ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை !
-
நிலவுகள் துரத்த நான் நடந்தேன், உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன். உன்னை அன்றி யாரை நினைப்பேன்? உருகும் உயிரை எங்கு புதைப்பேன்? காலை வந்த...
-
மாலை மங்கும் நேரம் ஒரு மோகம் கண்ணின் ஓரம் உன்னை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும் காலை வந்தால் என்ன வெயில் எட்டி பார்த்தால் எ...
-
"என் உள்மனதில் ஓயாத அலையாக அடித்துக் கொண்டிருக்கும் ஆசை ஒன்று உண்டு. தமிழ், தமிழ்நாடு, உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் இழந்த பெருமைகளை மீட்...
-
இப்படி மழை அடித்தால் நான் எப்படி குடை பிடிப்பேன் இப்படி அலை அடித்தால் நான் எப்படி கால் நனைப்பேன் இப்படி கண் இமைத்தால் நான் எப்படி உன்னை ரசிப...
-
வலி பார்த்ததும் விழி பூத்ததும் உயிர் போனதும் உடல் வாழ்வதும் நேற்றுதான் நிகழ்ந்ததாய் நெஞ்சிலே வேகுதே !
-
இதயத்தை ஏதோ ஒன்று இழுக்குது கொஞ்சம் நின்று இதுவரை இதுபோலே நானும் இல்லையே கடலலை போலே வந்து கரைகளை அள்ளும் ஒன்று முழுகிட மனதும் பின் வாங்கவில்...
-
தூது வருமா தூது வருமா காற்றில் வருமா கரைந்து விடுமா தூது வருமா தூது வருமா கனவில் வருமா கலைந்து விடுமா நீ சொல்ல வந்ததை சொல்லி விடுமா நீ சொல்ல...
-
வானம் என்பதே எல்லை எங்கும் போகலாம் வானவில்லிலே ஊஞ்சல் கட்டி ஆடலாம் மண்ணைத் தோண்டினால் அங்கே என்னைக் காணலாம் அன்பே தங்க வைரங்கள வேண்டும...
-
லோலிதா! லோலிதா..! உன் தூரம் கூட பக்கமாக மாறுதே பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய் மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய் நீ வேகம் கா...
0 Responses to 'பார்த்த முதல் நாளே'
Post a Comment